புதுடெல்லி: அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி, டிடிஎஸ் செலுத்தியதாக கணக்கு காட்டி ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரித்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகரில் உள்ள வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் அபய் காந்த், சவுரவ் சிங், ரோகித் குமார். இவர்கள் மூவரும் மூத்த அதிகாரிகளின் கணினி பாஸ்வேர்டை தவறாகப் பயன்படுத்தி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு டிடிஎஸ் திருப்பி செலுத்தியதாக ரூ.1.39 கோடி பணத்தை கையாடல் செய்தனர். போலியான 11 வரி செலுத்துவோரின் பெயரில் கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை, இந்த பண பரிமாற்றம் நடந்துள்ளது.