சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வழங்கிய கோரிக்கைகள்:
தமிழ்நாடு சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நீட்டுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தர வேண்டும். மதுரையில் பிரதமரால் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.