ஆவடி: கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் புதிதாக தனியே தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு உணவுப்படி வழங்கப்படவில்லை. எனினும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மட்டும் காவலர்களுக்கு மாதந்தோறும் உணவுப் படி வழங்கப்படுகிறது. இதனால் மாத சம்பளம் வாங்கும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள், அதில் வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி கட்டணம், பேங்க் லோன் போன்றவற்றுக்கு செலவிடுகின்றனர்.