இறகுபந்து போட்டி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு இறகுபந்து போட்டி கூடுவாஞ்சேரி மூலகழனி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவருமான எம்கேடிகார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு இறகுப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார்.

Related Stories: