ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை அழைத்து செல்லும் 206 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோர் பள்ளி வாகனங்களின் உரிமம் முறையாக உள்ளதா, வாகனங்களில் எப்.சி., பர்மிட் உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா, மாணவர்களை ஏதுவாக ஏற்றி செல்வதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா மற்றும் விபத்து நேரங்களில் உடனடியாக வெளியேற வழிகள் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர்.