புது ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் லஞ்சம் கேட்ட ஆடியோ வைரல் வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்

நாகர்கோவில்: ேதாவாளை தாலுகா பகுதியில் புதிய ரேஷன் கார்டு பெற்றவரிடம் லஞ்சம் கேட்டு வருவாய் ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியான நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பூதப்பாண்டியில் தோவாளை வட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதியதாக ரேஷன்கார்டுகள் அண்மையில் வழக்கப்பட்டன. 180க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகள் இவ்வாறு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் ரேஷன் கார்டு பெற்றுக்கொண்டவர்களை தொடர்பு கொண்டு வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தி லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் பயனாளி ஒருவருடன் பேசிய ஆடியோ சமூக வலைதங்களில் வைரலானது. அதில் பயனாளி ‘ரூ.100 போதுமா சார் என்று கேட்க, மறுமுனையில் பேசிய அதிகாரி கூடுதலாக ஒரு சைபர் சேர்த்து ஆயிரம் ரூபாயாக கொடு’ என்று கேட்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தது. வருவாய் ஆய்வாளர் மந்திரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து டிஆர்ஓ சிவப்பிரியா உத்தரவிட்டார்.

Related Stories: