நீர்வீழ்ச்சியில் மூழ்கி துணை தாசில்தார் பலி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(36). மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இவர் திருக்கோவிலூர் தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான நேற்று முன்தினம் நண்பர்கள் 2 பேருடன் காரில் கல்வராயன்மலைக்கு சென்று சுற்றி பார்த்துள்ளார். பின்னர் 3 பேரும் கல்வராயன்மலையில் உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அங்கு நீர்வீழ்ச்சியில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது சுந்தர்  நீரில் மூழ்கி பலியானார்.

Related Stories: