மாநகராட்சியின் பறக்கும் படை குழுவினரால் ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டல பறக்கும் படை குழுவினரால் கடந்த ஒரு வாரத்தில் 203 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட மாநகராட்சி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், பொது இடங்களில் கொட்டப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகாலில் இணைக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திற்கும் மண்டல பறக்கும் படைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மண்டல செயற்பொறியாளர் தலைமையில் ஒரு உதவி செயற்பொறியாளர், ஒரு உதவி மேல்நிலை பொறியாளர், ஒரு மின் துறை உதவி பொறியாளர், 10 சாலைப் பணியாளர்கள் மற்றும் 5 மலேரியா பணியாளர்கள் என மொத்தம் 18 பேர் உள்ளனர். கட்டிடக்கழிவுகளை அகற்ற 1 பாப்காட் இயத்திரம், ஆக்கிரமிப்புகளை அகற்ற 1 ஜேசிபி மற்றும் இவற்றை கொண்டு செல்ல லாரி வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவானது வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் முக்கிய சாலைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

மாநாகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, கட்டிடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்கள் மற்றும் மழைநீர் அடில்களில் கழிந்திர் இணைப்பை ஏற்படுத்தியுள்ள நபர்கள் ஆகியோர் மீது அபராதமும் இக்குழுணல் விதிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவினரால் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து பணியில் மண்டலங்களில் 233 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 89 மெட்ரிக் டன் அளவிலான கட்டிடக் கழிவுகள் அற்றப்பட்டு உள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களிலிருந்து 23 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

எணவே மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அமற்ற வேண்டும் பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மேலும் மழைநீர் வடிகால்களில்களில் கழிவுநீர் இணைப்புகளை உடனடியாக அற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் அந்த நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் அபராதம் செலுத்துவதை தவிர்திடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Stories: