சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உதிரிபாக நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி திருடபட்டுள்ளது. ஆன்லைனில் நூதனமாக பணத்தை திருடிய கொல்கத்தாவை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரதாப், சபீர் அலி கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிலையில் அவர்களிடமிருந்து ரூ.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.