மதுரை: டெல்லியில் அடமானம் வைத்த அதிமுகவை மீட்க வேண்டும் என்று திக தலைவர் வீரமணி தெரிவித்தார்.மதுரை தெப்பக்குளத்தில் திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அளித்த பேட்டி: சேது சமுத்திர கால்வாய்திட்டம் செயல்படுத்த வேண்டும். திராவிட மாடல் அரசை பற்றிய அவதூறு பிரசாரத்திற்கு கண்டனம், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு உள்ளிட்ட 8 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அக்னிபாத் திட்டத்தில் இணைந்தால் துணி துவைக்கலாம், முடி திருத்த போகலாம் என பாஜவினர் கூறுவது இளைஞர்களின் கோபத்தை தூண்டுகிறது.