பட்டுக்கோட்டை: கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ 150ம், உரித்த தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 50ம் விலை நிர்ணயம் செய்து அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தென்னை விவசாயிகள், தேங்காய்கள், பதாகைகளுடன் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி ரோடு முக்கம் காந்தி சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டனர். பேருந்து நிலையத்தை அடைந்ததும் விவசாயிகள், தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யவும், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்கவும் கோரி கோஷமிட்டனர். பின்னர் ஒரே நேரத்தில் நடுரோட்டில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.