ஸ்ரீநகர்: இந்தியாவில் ஊடுருவி தாக்குதல் நடத்துவற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 700 தீவிரவாதிகளுக்கு 11 முகாம்களில் ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு வழியாக பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஊடுருவுகின்றனர். இவர்கள் ஜம்முவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப நாட்களாக தீவிரவாதிகளின் இந்த நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று கூறிய தாவது: எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இந்தியாவிற்குள் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 150 தீவிரவாதிகள் தற்போது தயார்நிலையில் இருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது.