சித்தூர்: ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு குறித்து தரக்குறைவாக டிவிட்டரில் விமர்சனம் செய்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா மீது, சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் பாஜ கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி, பாஜ சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால், நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், மகாபாரதத்தில் திரவுபதிக்கு நடந்த சம்பவத்தை கார்ட்டூன் படம் போல் சித்தரித்து ஆபாசமான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.