நிலக்கோட்டை: தொடர்மழை காரணமாக நிலக்கோட்டை, ெகாடைரோடு பகுதி ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ெகாடைரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து துவங்கியுள்ளது. இதனையடுத்து காட்டாறுகளில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.