குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து தங்கையின் தோழியை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது

புதுக்கோட்டை: தங்கையின் திருமணத்திற்கு வந்த தோழிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பலாத்காரம் செய்ய முயற்சித்த டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே சூசைப்புடையான்பட்டியை சேர்ந்தவர் சிவா(28). டிரைவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவரது தங்கையின் திருமணம் நேற்று முன்தினம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மணப்பெண்ணின் தோழி கரூரை சேர்ந்த 19 வயது பெண் வந்திருந்தார். அவரது அழகில் மயங்கிய சிவா, அந்த பெண்ணுக்கு குளிர்பானத்தில் பீரை கலந்து கொடுத்தார்.

சற்று நேரத்தில் போதை தலைக்கேறியதும் மயங்கிய அந்த இளம்பெண்ணை ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த இளம்பெண் திடீரென சுதாரித்துக்கொண்டு பதற்றத்துடன் சிவாவின் பிடியிலிருந்து தப்பி வந்து உறவினர்களிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர்கள் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சிவா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். தங்கையின் திருமணத் திற்கு வந்த தோழியை வாலிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: