கோவை: கோவையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பரிசோதனையை அதிகரிக்கவும் கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கிருமி நாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.