உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாலி புதுக்காலனி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செவிலியர்கள் நேற்று சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இதனை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.