திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது. 10 பேர் மரணமடைந்தனர். இந்தியாவில் 3 மாத இடைவெளிக்குப் பிறகு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா உள்பட மாநிலங்களில் நோய் பரவல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் கேரளாவில் நேற்று நோயாளிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது.