அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி போலீசார், போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி, சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அண்ணாநகர் பகுதியில் உள்ள கல்லூரி, அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.