அயனாவரம் பகுதியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த இரண்டு பேரை கைது செய்தனர். சென்னை ஓட்டேரி சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் சுபா (51). இவர் கடந்த 18ம்தேதி இரவு அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக மகளுடன் மொபட்டில் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், சுபா அணிந்திருந்த ஒன்றரை சவரன்  தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர். இதுபற்றி அயனாவரம் போலீசில் சுபா புகார் கொடுத்தார்.

அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சம்பவ நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பதிவான காட்சியை வைத்து சென்னை புழல் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்த டில்லிபாபு (25), அம்பேத்கார் தெருவை சேர்ந்த அபினேஷ் (24) ஆகியோரை கைது செய்தனர்.

இவர்கள்தான் சுபாவிடம் செயின் பறித்தவர்கள் என்று தெரிந்தது. இதன்பிறகு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவர் மீதும் புழல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது.

Related Stories: