வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, வல்லூர் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 3வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.

இந்நிலையில், நேற்று 2வது அலகில் உள்ள கொதிகலனில் மீண்டும் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்த அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அந்த அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என அனல் மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: