பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய அனல் மின் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து கூட்டு நடவடிக்கையாக, வல்லூர் அனல் மின்நிலையம் நிறுவப்பட்டு, 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என மொத்தம் 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 3வது அலகில் கொதிகலனில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.