திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், வருமுன்காப்போம் திட்ட மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் பட்டாபிராமில் இன்று நடந்தது. ஆவடி வடக்கு பகுதி தலைவர் ஜி.நாராயணபிரசாத் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முகாமை துவக்கிவைத்தார். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.