பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு..!!

டெல்லி: குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு நியமிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கினார். இதற்கிடையே, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் இருவரும் பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர். பா.ஜ.க. வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பாஜகவின் ஆதரவு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பாஜகவுக்கு ஆதரவாவோ, எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ இந்த முடிவை எடுக்கவில்லை என்றும், தங்கள் கட்சியின் இயக்கத்தை மனதில் வைத்து ஆதரவு அளிப்பதாக  தெரிவித்துள்ளார். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். 

Related Stories: