ஆற்காடு : ஆற்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு நேற்று சுகாதாரத்துறையினர் அதிரடி அபராதம் விதித்து வசூலித்தனர்.
ஆற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், நீலவண்ணன், நிசாந்த், ஜெயக்குமார், சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்காடு கலவை ரோடு கஸ்பா ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.