திருப்பதி: தி ஏழுமலையான் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிக்கிறது. திருப்பதி கோயில் வைகுண்டம் காத்திருப்பறைகளில் 32 அறைகளும் நிரம்பிய நிலையில் ஆஸ்தான மண்டபம் வரை பக்தர்கள் 3 கி.மீ.க்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமும் 300 ரூபாய் சிறப்பு விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாராந்திர விடுமுறை கூட்டத்தை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஏற்கெனவே விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிபாரிசு கடிதங்கள் பெயரில் எந்த தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.