வேலூர் : தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தாலுகா மற்றும் ஆயுதப்படையில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் தேர்வு மையமாக விஐடி பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 5 ஆயிரத்து 434 பேர் எழுத உள்ளனர். தேர்வு மையத்தின் முன்னேற்பாடுகள் குறித்து டிஐஜி ஆனிவிஜயா, எஸ்பி ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்றிரவு ஆய்வு செய்தனர். பின்னர் டிஐஜி ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறுகையில், ‘வேலூர் விஐடியில் நடைபெறும் எஸ்ஐ தேர்வை 5 ஆயிரத்து 400 பேர் எழுத உள்ளனர்.