சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பேரூராட்சி சார்பில் பயணிகளின் நலன்கருதி வெயிலின் தாக்கத்தால் பாதிக்காதவாறு கீற்று பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் பயணி நிற்காதவாறு சமூக விரோதிகள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவைப் பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலின் தாக்கத்தால் பயணிகள் அவதியடைந்து வருவதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் தங்க. குலோத்துங்கன் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் உத்தரவின் பேரில் கீற்று பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் வெயிலின் தாக்கத்தில் சிக்காமல் பயனடைந்து வந்தனர்.