×

ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டம்

சென்னை: ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்க தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு அணையிலிருந்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக, கூட்டுக் குடிநீர் திட்டம் ஒன்றை செயல்படுத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உத்தேசித்துள்ளது. இத்திட்டத்திற்காக ஆழியாறு அணையிலிருந்து நீர் எடுப்பதற்கு பி.ஏ.பி பாசனதார விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எனவே இப்பிரச்சனை குறித்து அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்து, சுமூகத்தீர்வு காண்பதற்காக, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் மற்றும் மாண்புமிகு நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு ஆகியோர் தலைமையில் 1.7.2022 அன்று, சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Tags : Azhiyaru Dam ,Ottansathram Municipality , Tamil Nadu Drinking Water Drainage Board Project to supply drinking water from Azhiyaru Dam to Ottansathram Municipality
× RELATED தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது...