சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் விளையாட்டு மைதானச் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 கார்கள் சேதமடைந்தது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அதன் அருகில் நிறுத்தப்பட்ட 3 கார்கள் அப்பளம் போல் நொறுங்கி சேதமடைந்தது. நேற்று இரவு திடீரென்று பெய்த பலத்த மழையின் காரணமாக புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான விளையாட்டுத் திடலின் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. இதில் சுவற்றின் ஓரத்தில் பழுது பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட கார்களின் கண்ணாடிகள் நொறுக்கியது.