கீழக்கரை: ஏர்வாடியில் 848ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கடந்த 1ம் தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. 11ம் தேதி மாலை கொடி ஏற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் மாலை ஆரம்பமானது. ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 6 மணியளவில் தர்காவை வந்தடைந்தது.