புதுடெல்லி: நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அமிதாப் காந்த்தின் பதவி காலம் வரும் 30ம்தேதியுடன் முடியும் நிலையில், இப்பதவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயரை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைந்த பிறகு, திட்டக்குழு கலைக்கப்பட்டு அதற்கு பதிலாக நிதிஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது, நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அமிதாப் காந்த், வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.