சென்னை: ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சை தளமாகக் கொண்டு செயல்படும் ஏஎப்டி வங்கியின் நிதியுதவியுடன் சென்னையில் உள்ள 231 மாநகராட்சிப் பள்ளிகளில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு நவீன தளவாடங்கள் மற்றும் சிறந்த கட்டிடங்கள் ஆகியவற்றுடன் அதிநவீன தோற்றத்துடன் காட்சியளிக்கும் வகையில் மேம்படுத்துவதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. சென்னைக்கு சமீபத்தில் வந்த ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரான்சின் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கக்காட்சியில் 231 பள்ளிகளில் நவீன வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.1,432 கோடி நிதி தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. நகரப் பள்ளிகளை டிஜிட்டல் மயமாக மாற்றும் கட்டம்-3ன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் வகுப்புகள் மொழி ஆய்வகங்கள், ஸ்டெம் ஆய்வகங்கள், டேப்கள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு மாற்றம், கால்பந்து மைதானம் மற்றும் உட்புற விளையாட்டு வசதிகள் போன்றவை இடம்பெறுகிறது.