டெல்லி: சிவசேனை சட்டமன்ற கட்சித் தலைவராக அஜய் சவுத்ரியை நியமித்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது. சிவசேனையில் ஏற்பட்டுள்ள பிளவால் மராட்டியத்தில் சிவசேனை காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அசாமின் குவாஹாத்தியில் உள்ள 37 அதிருப்தி எம்எல்ஏக்களால் சிவசேனை சட்டமன்ற கட்சி தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கட்சி தலைமை பதிலடி கொடுத்தது.