சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 வாலிபர்கள் அதிரடி கைது

பெரம்பலூர்: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளி விடுமுறைக்காக பெரம்பலூர் அருகே உறவினர் வீட்டிற்கு கடந்த 3 நாட்கள் முன் வந்தார். அங்கு தனது அண்ணன் மற்றும் அண்ணி வேலைக்கு சென்ற வேளையில் அவர்களது 3 வயது மகனை அந்த சிறுமி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நேற்று மாலை வீட்டில் வேறு ஆட்கள் இல்லாததை அறிந்து கொண்டு அருகே உள்ள செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலம் கும்லாவை சேர்ந்த சுனில் ராம்(20), பெரு நாகசியா (20), காமேதஷ்வர் சிங்(19) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வடமாநில இளைஞர்களை அடித்து உதைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் வந்து மூவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுமியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சுனில்ராம், பெருநாகசியா, காமேதஷ்வர் சிங் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: