பெரம்பலூர்: சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளி விடுமுறைக்காக பெரம்பலூர் அருகே உறவினர் வீட்டிற்கு கடந்த 3 நாட்கள் முன் வந்தார். அங்கு தனது அண்ணன் மற்றும் அண்ணி வேலைக்கு சென்ற வேளையில் அவர்களது 3 வயது மகனை அந்த சிறுமி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது நேற்று மாலை வீட்டில் வேறு ஆட்கள் இல்லாததை அறிந்து கொண்டு அருகே உள்ள செங்கல் தொழிற்சாலையில் பணியாற்றி கொண்டிருந்த ஜார்கண்ட் மாநிலம் கும்லாவை சேர்ந்த சுனில் ராம்(20), பெரு நாகசியா (20), காமேதஷ்வர் சிங்(19) ஆகியோர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர்.