திருவனந்தபுரம்: கேரளாவில் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பிரபல பாடகர் பஷீர் மரணமடைந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கேரள மாநிலம், கொல்லம் அருகே இடவா பகுதியை சேர்ந்தவர் பஷீர் (78). பழம்பெரும் மேடைப் பாடகர். இவர் மலையாள சினிமாவில் ஜானகி, வாணிஜெயராம் உள்பட முன்னணி பாடகிகளுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் விழா மற்றும் நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடி வந்தார். இந்நிலையில் நேற்று பஷீர் ஆலப்புழாவில் ஒரு பிரபல இசை நிறுவனத்தின் பொன்விழா ஆண்டையொட்டி மேடையில் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்.