ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் 100 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடல் உள்வாங்கிய காரணத்தினால் ராமேஸ்வரம் கடலுக்கு அடியில் உள்ள பவளப்பாறைகள், சாமி சிலைகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது.