ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம், அண்ணாநகரை சேர்ந்தவர் விஜய் (26). பிரபல ரவுடி. இவர் மீது ஆந்திராவில் ஒரு கொலை, திருவள்ளூர் அருகே மப்பேட்டில் ஒரு கொலை முயற்சி உள்பட பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட விஜய்யை போலீசார், வலைவீசி தேடி வந்தனர். இந்தவேளையில் விஜய், ஒருவரை கொலை செய்ய உள்ளதாகவும், அதற்காக தனது வீட்டில் தங்கி திட்டமிட்டு வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.