தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 56 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 45 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 33 பேர், செங்கல்பட்டில் 11 பேர் உள்பட 7 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 31 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது. இந்த மாவட்டங்களில் யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பும் இல்லை, சிகிச்சையிலும் ஒருவர் கூட இல்லை.72-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: