தேசிய பேட்மிட்டன் போட்டியில் புதுவை வீராங்கனைகள் சாதனை

வில்லியனூர் : கேரளாவில் கடந்த 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை தேசிய அளவில் பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.  புதுச்சேரி சார்பில் எக்ஸ்மியர் விளையாட்டு க்ளப் சார்பில் பயிற்சியாளர் கவிதா தலைமையில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி சார்பில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற தீபா, லட்சுமி ஆகியோர் தெலங்கானா அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றனர். ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற சாமுண்டீஸ்வரி கேரளா அணியுடன் மோதியதில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற வீரர்கள் நேற்று விளையாட்டுத்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: