அமராவதி: ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முலகலேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள் ஷர்புனா, பேரன் பைரோஜ் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சுவர் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் ஜைனுபி (60), பாபு (35), ஷர்புனா (30), பைரோஜ் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.