சென்னை: தமிழ்நாட்டில் 25 நாட்களாக நீடித்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. தமிழகத்தில் மே மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் வாட்டி வந்தது. கோடை வெயிலின் உச்சமான கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம், ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதி தொடங்கும்; 28ம் தேதி நிறைவுபெறும். அந்த வகையில் 25 நாட்கள் நீடித்த கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன் சேலம், ஈரோடு, வேலூர், திருச்சி, திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் 98 முதல் 102 பாரன்ஹீட் வரை வெயிலின் அளவு இருந்தது. இந்த 25 நாட்களில் கடந்த 6ம் தேதி வேலூரில் 105.98 டிகிரி வெயில் பதிவானது தான் அதிகபட்ச வெப்பமாகும்.