ராமேஸ்வரம் மீனவ பெண் கொலையில் ஒடிசா இளைஞர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவ பெண் கொலையில் கைது செய்யப்பட்ட ஒடிசா இளைஞர்களிடம் போலீசார் ெதாடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரம் வடகாடு கிராமத்தை சேர்ந்த 45 வயதான மீனவப்பெண் கடந்த மே 24ம் தேதி கடலில் பாசி சேகரிக்க சென்றபோது பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரில் ராமேஸ்வரம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் தனியார் இறால் பண்ணையில் வேலை பார்த்த ஒடிசா இளைஞர்கள் 6 பேர் உள்பட 7 பேரை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் ரஞ்சன் ராணா, பிரகாஷ் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் இருவரையும் போலீசார் ராமேஸ்வரம் வடகாடு கடற்கரையில் குறிப்பிட்ட இறால் பண்ணை அருகில் சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து இருவரும் நடித்து காட்டி விவரங்களை தெரிவித்தனர். மேலும் கொலையான பெண் அணிந்திருந்த நகைகளை விற்க முயன்றதாக இருவரும் தெரிவித்த நகைக்கடைக்கு அழைத்து சென்றனர். பிரகாஷ், ரஞ்சன் ராணா உள்ளிட்ட 7 பேரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: