ஐதராபாத்: இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார எம்பி என்ற பெருமையை, ‘ஹெட்டிரோ’ மருந்து குழுமத்தின் தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி பெற உள்ளார்.பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பில், ‘ஹெட்டிரோ’ மருந்து குழுமத்தின் தலைவர் பண்டி பார்த்த சாரதி ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் தனது வேட்பு மனுவில் தனக்கும், தனது மனைவிக்கும் ₹5,300 கோடிக்கு சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டி உள்ளார். இதன் மூலம், இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார எம்பி என்ற பெருமையை இவர் பெற உள்ளார்.