திருவனந்தபுரம்: கேரள அரசின் விஷு பம்பர் லாட்டரி டிக்கெட் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. முதல் பரிசு ₹10 கோடி என்பதால் டிக்கெட் வெளியான உடனேயே பரபரப்பாக விற்பனையானது. மொத்தம் 43.86 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டன. இதில், 43,69,202 டிக்ெகட்டுகள் விற்பனையானது. இதன் மூலம், கேரள அரசுக்கு ₹93 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. இந்நிலையில், லாட்டரி குலுக்கல் கடந்த 22ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில், முதல் பரிசான ₹10 கோடி HB 727990 என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு விழுந்தது. இந்த டிக்கெட் திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் உள்ள ஒரு லாட்டரி ஏஜென்சியில் விற்பனையானது.