சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று அளித்த பேட்டி:சென்னை வந்த பிரதமருக்கு பாஜ சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைத்தனர். தமிழ் கலாச்சாரத்தை தனது தோளிலே தூக்கி, நம் மண்ணின் மீது எவ்வளவு மரியாதை இருக்கிறது. எப்படி நம் மண்ணை நேசிக்கிறேன் என்று பிரதமர் பேசும் ஒவ்வொரும் வார்த்தையும் நமக்கு தெரிந்தது. இலங்கையில் இருக்கிற நமது தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்நாட்டிற்காக செய்து இருக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கோடிட்டு பிரதமர் பேசியிருக்கிறார். பிரதமர் மனம் நெகிழ்ந்து இங்கே இருந்து சென்று இருக்கிறார். எந்த மாநிலத்திற்கும் இல்லாத கவுரவத்தை தமிழகத்திற்கு கொடுத்து இருக்கிறார்.