குன்னூர்: குன்னூர் பழக்கண்காட்சி நாளை துவங்குகிறது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. கோடை விழாவையொட்டி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நாளை(28ம் தேதி) துவங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி சிம்ஸ் பூங்காவில் நீலகிரி மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பழங்கள் கொண்டு வரப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது. அதற்கான பணிகளில் பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.