மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது மனைவியுடன் கடற்கரையில் நடந்து சென்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை போரூரை சேர்ந்தவர் திவாகரன் என்பவரின் மகன் தினேஷ் (33). இவர், துபாயில் ஒரு சிறிய நிறுவனம் துவங்கி, தொழில் செய்து வந்தார். இவரது நெருங்கிய நண்பரின் குடும்ப நிகழ்ச்சி நேற்று மாமல்லபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் தினேஷ், தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.