மாமல்லபுரம் கடற்கரையில் மனைவியுடன் நடந்து சென்றவர் மயங்கி பலி

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நண்பரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது மனைவியுடன் கடற்கரையில் நடந்து சென்ற வாலிபர் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை போரூரை சேர்ந்தவர் திவாகரன் என்பவரின் மகன் தினேஷ் (33). இவர், துபாயில் ஒரு சிறிய நிறுவனம் துவங்கி, தொழில் செய்து வந்தார். இவரது நெருங்கிய நண்பரின் குடும்ப நிகழ்ச்சி நேற்று மாமல்லபுரத்தில் ஒரு தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. இதில் தினேஷ், தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார்.

பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று மாலை தனது மனைவியுடன் மாமல்லபுரம் கடற்கரையில் தினேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: