விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி இருந்ததாக கூறப்படும் நிலையில் 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை வளரிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் திடீரென்று மயக்கமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர்.