கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை வீரபாண்டி பிரஸ் காலனியை சேர்ந்த அமல் சிபோனின் 3 குழந்தைகள், தாத்தா செல்வராஜ் உடன் கேரள மாநிலம் மலப்புழா அணைக்கு சென்று காரில் திரும்பியபோது, விபத்து நேரிட்டுள்ளது. மதுக்கரை பால்துரை சந்திப்பு அருகே எதிரே வேகமாக வந்த வேன் மோதி காரை பின்னோக்கி தள்ள எதிர்புறம் வந்த மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.