கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

கோவை: கோவை மதுக்கரை நெடுஞ்சாலையில் கார் மீது வேன் மோதிய விபத்தில் 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கோவை வீரபாண்டி பிரஸ் காலனியை சேர்ந்த அமல் சிபோனின் 3 குழந்தைகள், தாத்தா செல்வராஜ் உடன் கேரள மாநிலம் மலப்புழா அணைக்கு சென்று காரில் திரும்பியபோது, விபத்து நேரிட்டுள்ளது. மதுக்கரை பால்துரை சந்திப்பு அருகே எதிரே வேகமாக வந்த வேன் மோதி காரை பின்னோக்கி தள்ள எதிர்புறம் வந்த மற்றொரு வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இதில் காரில் இருந்த 4 பேரும் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 4 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Related Stories: