ஜெய்ப்பூர்: இந்தக் கொடுமையான அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் அம்மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் துறை அமைச்சர் அசோக் சந்த்னா வெளியிட்ட பதிவில், ‘முதல்வர் அவர்களே! இந்தக் கொடுமையான அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். எனது துறை சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் முதன்மைச் செயலாளர் குல்தீப் ரங்காவிடம் ஒப்படைக்க வேண்டும். காரணம் என்னவென்றால், அவரே எல்லா துறைகளுக்கும் அமைச்சராக இருக்கிறார்’ என்று கூறியுள்ளார். அமைச்சர் இவ்வாறு கருத்து கூறியதின் பின்னணி குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘ராஜஸ்தான் பழங்குடியினத் தலைவரும், எம்எல்ஏவுமான கணேஷ் கோக்ரா என்பவரின் நிலப் பத்திரம் தொடர்பான விவகாரத்தில் மாநில அரசு அதிகாரிகளுக்கும், எம்எல்ஏ தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.